Monday, 10 September 2018

ஒட்டு நிலைமொழி



பகுதியுடன் இடைநிலை, விகுதிகளை ஒட்டிக்கொள்ளும் சொற்களை உடைய மொழி ஒட்டுநிலை மொழி எனப்படும். தேவைப்பட்டால் இவற்றைத் (பகுதி, இடைநிலை, விகுதி என தனித்தனியே பிரித்து விடலாம்.

சித்திய மொழிகள், திராவிட மொழிகள், மலேயா, பாசினேஷியன் மொழி, ஜப்பான், கொரியா, பின்னிஷ், பாஸ்க் போன்றன ஒட்டுநிலை மொழிகளாகும்.

கண்ணன், அறிஞர், வந்தான், பார்த்தான் என வரும்.

ஒட்டுநிலையை முன்னொட்டு, பின்னொட்டு என இரண்டாகப் பிரிப்பர்.

கீரன் – நக்கீரன், நாயகன் – விநாயகன், நீதி – அநீதி, பின்னை – நப்பின்னை இவை முன்னொட்டுகள்.

படித்தான், கொடுப்பவர் இவை பின்னொட்டுகள்.

No comments:

Post a Comment